Thursday 15 August 2013

story of madras part - 01

சென்னையின் கதை  பாகம் - 1  ( 1600 - 1700AD) 


     நமது சென்னை மாநகரின் கதை பற்றி பல பேர் எழுதி நீங்கள் வாசித்து இருப்பீர்கள் .. தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் .. புத்தகம் படிப்பது  என்பதே துர்லாபம் ஆகி போய் விட்டது .. காரணம் ஒரு விசயத்தை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டியதில்லை .. பிட் பிட்டாக தெரிந்தாலே அவன் பெரிய விஷயக்காரன் என்றாகிவிட்டது ..

        சென்னை பற்றிய விசயமும் அதேதான் .. அதை மாற்ற ஒரு சிறு முயற்சி ..இது ஒரு நீண்ட பதிவாக இருக்க பார்த்தசாரதியும், கபாலீஸ்வரரும் அருள் புரிவாராக .. 


      நமது சென்னை பற்றிய பதிவை ஆரம்பிப்பதற்கு நாம் செல்ல வேண்டிய இடம் .. ஐரோப்பா...லிஸ்பன் நகருக்கு  ,  1500-1600 AD வரை போர்துகேசியர்கள் மட்டுமே ஆப்ரிக்க கண்டத்தை சுற்றி வந்து இந்தியாவில் வியாபாரம் செய்து வந்தனர் ..

ஐரோப்பியாவில் மிகப்பெரிய வர்த்தக நகராக அப்போது 1500 AD இல் திகழ்ந்த நகரம் ஆம்ஸ்டர்டம் ... அங்கு இருந்து டச்சு கார்கள் எல்லா வாணிப பொருள்களையும் லிஸ்பன் நகரில் மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர்


அப்போது போர்சுகளை ஆண்டு வந்த அரசன் டான் சபாசிதியன் என்பவன் பிள்ளை இல்லாமல் இறந்ததால் ஸ்பெயின் தேசத்து அரசன் பிலிப் 2 என்போன் பட்டத்துக்கு வந்தான் .. இவன் டச்சு காரர்களை போர்ச்சுகல் உள்ளே விட மறுத்து வெறுப்பை சந்தித்தான் ..


இதில் ஆரம்பித்த வேகம் டச்சு காரர்களை நேரடியான வியாபாரத்தில் ஈடுபட வைத்தது ..ஸ்பெயின் அரசின் ஆட்சி முறையினால் ஐரோப்பியாவில் ஸ்பெயின் தனது வலுவை இழந்து போர்ச்சுகல் நாட்டையும், இந்திய வணிகத்தையும்  இழந்தது .. 



1610 AD, டச்சு காரர்கள் .. முதன் முதலாய் சென்னையை அடுத்த புலிகாட் (பழவேற்காடு ) பகுதியில் ஒரு சிறு வியாபாரத்தலத்தை அமைத்து நமது சென்னை உருவாக காரணம் ஆயினர் ..
1660 இல் நாகப்பட்டினம் மற்றும் கொச்சின் பகுதிகளை போர்ச்சுகீசியரிடம் இருந்து பெற்று தென் இந்தியாவின் முதன்மை வர்த்தக நாடாக மாறி இருந்தனர் ..

சரி ..ஆங்கிலேயர்? என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள்? 


1599 ஆம் ஆண்டு "merchant adventurers" என்கிற குழுவின் கீழ் இந்தியாவில் வியாபாரம் செய்ய வேண்டி இங்கிலாந்து அரசரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்து ..23 September 1600..அன்று "East india association" 20 டைரக்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது ..

சென்னைக்கு அவர்கள் உடனடியாக வரவில்லை ..அப்போது டச்சு அரசுடன் இங்கிலாந்து அரசுக்கு இருந்த உடன்படிக்கை காரணாமாக அவர்கள் துணிந்து இந்தியாவிற்கு வரவில்லை ..

1601 AD, ஆங்கிலேயர் கப்பல் சென்ற இடம் இந்திய அல்ல .. இந்தோனேஷியா நாட்டில் உள்ள indian archipelago என்கிற தீவிற்கு .. அவர்கள் வியாபரம் பண்ண விரும்பிய பொருள் ஜாதிக்காய், மிளகு ,கற்பூரம்  (nutmeg, pepper and camphor)

பண்ட மாற்றுமுறை இருந்த அந்த காலத்தில் இந்தோனேஷியாவில் இந்திய துணிகளுக்கு இருந்த கிராக்கியை பயன் படுத்தத் நினைத்த அவர்கள் டச்சுடன் சமரசம் செய்து கொண்டு சென்னையில் புலிகாட்டிலே அவர்களுடன் ஒரு ஒண்டு குடித்தனம் நடத்தினர்!!
காலத்தில் ஒரு பெரும் சண்டை இந்தோனேஷியாவில் நடந்து பல ஆங்கிலேயர்கள் கொடூரமான முறையில் டச்சு காரர்களால் கொல்லப்பட்டார்கள் (massacre of amboyna)    இதனால் ஆங்கிலேயர்கள் புலிகாட்டில் இருந்து வெளியேறி 1st March 1639 AD,  இல் பிரான்சிஸ் டேயால், அப்போதைய விஜயநகர(சந்திரகிரி) ராஜா  ..உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தற்போதைய கோட்டை இருக்கும்  பகுதியை வாங்கினார் ..


அந்த அரசனும் அந்த இடத்தை "ஸ்ரீரங்கராஜ பட்டினம் " என்று பெயர் சூட்ட சொல்லியே உத்தரவிட்டார் (மெட்ராஸ் பேரு ஸ்ரீரங்கபட்டினம்  என்று இருந்திருக்க வேண்டும்??)

ஆனால் செங்கல்பட்டு பகுதியில்  இருந்த நாயக்க பாளையக்காரர் தனது தந்தையார் பெயரே இருக்கவேணும் என்றும் இல்லையேல் பிரச்சனை!! என்று சொன்னதால் .. சென்னை பட்டணம் என்று பெயர் இடப்பட்டதாக தெரிகிறது ..

அந்த நூற்றாண்டில் உடனே அந்த கோட்டை எழுந்துவிடவில்லை ..

மேலும் பார்ப்போம் ....



1 comment: